Saturday, December 24, 2016


யாவர்க்கும்
 மரணம்
ஒரு முறை தானடா ..
எனக்கோ அது
அனுதினம் ஏனடா?

நடைப்பிணமாய்க்
கிடந்தேனடா
இதுவரை ..எனக்கு
இந்த நிலை தொடர்வது
எதுவரை?  

உன்னைப்
பிரிந்ததும்
இறந்து விட்டேன்
நானடா.. இன்று
இறந்தவள் பேசுகிறேன் ...

என் உயிரை மீட்க
வருவாயா இல்லை
சமாதியை தரிசித்து
அனுதாபம் செலுத்திட
வருவாயா? 

இவை இரண்டில் எது
நடந்தாலும் மீளாது
என் உயிரடா.
ஏனெனில் இப்போது
உன்னுடன் 
இறந்தவள்
பேசுகிறேன் ,,,

No comments:

Post a Comment