Saturday, December 24, 2016


என்ன தவறு
நான் செய்திட்டேன்
புரியவில்லை இன்னும்
உன்னை நேசித்தது தப்பா
நேசித்த உனை
மறக்க முடியாமல்
தவித்து உனக்காகவே
வாழ்வது தப்பா....நீ 

சந்தோசிதிருக்க வேண்டி
என் அத்தனை
கஷ்ட்டங்களையும்
மறைத்து
உள்ளத்துள் அழுது
உதட்டால் 
புன்னகைக்கிறேனே அதுவா..

இல்லையேல் ஓர்
இம்மியளவும் உன்
நினைவின்றி
இதயமது துடிக்க மறந்து
உன் கனவுகளை
விழிகளுள் தேக்கி வைத்து
வரும் கண்ணீர் கனவுகளை
அழித்திடுமோ இல்லை உன்
கண்களும் கலங்கிடுமோ
என்றஞ்சி உள்ளக்
குமுறல்களை
அடக்கியாழ்வது தப்பா..

என் ஒட்டுமொத்த
இன்பங்களையும்
ஒத்தி வைத்து.. உன்னிடம்
வரும் தவமிருக்கிறேனே
அதுதான் தப்பா
ஏனிந்த முடிவெடுத்தாய்
என் வாழ்வில் நீயும்
வந்ததேனடா
அன்பை நீயும்
பொழிந்ததேனடா 

சொல்லம்புகளில் எனை
தாக்கியபோதேல்லாம் 
உள்ளம்
உடைந்து போனாலும் என்
விழித்தடாகத்து நீரை
வலியவிடாமல்
மனக் காயங்களை மறைத்து
இதல் திறந்து சிரித்து நீ
சந்தோசித்திருக்குமாழகை
ரசித்தது தப்பா... 
 
இப்போதேனும்
சொல்லிவிடு என்னுயிரே
பேதையிவள் செய்திட்ட
குற்றமென்னவென்று..
எனை நான்
சீர்திருத்திக் கொள்கிறேன்
எனக்காக அல்ல...நீ
சந்தோசித்திருக்க.....

No comments:

Post a Comment