Saturday, December 24, 2016


உயிர் மூச்சாய்
இதயத் துடிப்பாய்
விழிகளின் பார்வையாய்
உடலின் அசைவாய்
கனவில் நிழலாய்
நிஜத்தில் காதலனாய்
மனதில் ஒளியாய்
செவிகளின் ஒலியாய்
இதழ்களின் மொழியாய்
என் கவிக்கு கருவாய்
நீ ஏனடா என்
வாழ்வில் மட்டும்
வந்து நீயே
நானாய் மாறாமல்
விலகிச் செல்கிறாய் ?
சற்று எட்டிப் பார்
உடைந்துபோன
என் மனத் துகள்களை....
ஒவ்வொரு துகள்களும்
உன் பெயரை
உச்சரிப்பதை
செவிமடுத்துப் பார் ...
துகள்களை
ஒன்றாய் சேர்த்து
ஓரிதயமாய்
வடிவமைத்துவிட
உன்னால் 
மட்டுமே முடியும் ...
ஆதலால்
அன்பே வந்துவிடு ...!

No comments:

Post a Comment