
இதயத் துடிப்பாய்
விழிகளின் பார்வையாய்
உடலின் அசைவாய்
கனவில் நிழலாய்
நிஜத்தில் காதலனாய்
மனதில் ஒளியாய்
செவிகளின் ஒலியாய்
இதழ்களின் மொழியாய்
என் கவிக்கு கருவாய்
நீ ஏனடா என்
வாழ்வில் மட்டும்
வந்து நீயே
நானாய் மாறாமல்
விலகிச் செல்கிறாய் ?
சற்று எட்டிப் பார்
உடைந்துபோன
என் மனத் துகள்களை....
ஒவ்வொரு துகள்களும்
உன் பெயரை
உச்சரிப்பதை
செவிமடுத்துப் பார் ...
துகள்களை
ஒன்றாய் சேர்த்து
ஓரிதயமாய்
வடிவமைத்துவிட
உன்னால்
மட்டுமே முடியும் ...
ஆதலால்
அன்பே வந்துவிடு ...!
ஆதலால்
அன்பே வந்துவிடு ...!
No comments:
Post a Comment