Saturday, December 24, 2016


ஆசையோடு 
பேச வந்தேன்
வார்த்தைக்குப் 
பதில்
கண்ணீர் மட்டுமே
அருவியாய் ஓடி
கண்களை நனைத்தது ,,
என்ன சொல்வேன் 
நானும்
வேதனையில் 
துவழுது
என்னுள்ளம்,, 
இக்கணமே
வெடித்துச்
சிதறுவதைப் போல் வலிக்குதடா
என்னுள்ளம்...
என்னை விட நீ
துடிப்பது தெரியுமாடா
எனக்கு..என்னென்று
சொல்வேன் 
என் மன
வேதனைக
ள்,,,
ஒன்றல்ல
இரண்டல்ல ஆயிரம்
கனவுகளைப் பூட்டி
வைத்திருக்கிறேன் என்
இதயப் பெட்டகத்துள் ,,,
ஆனாலும் அன்பே என்
ஆசைக்கு உன் வாழ்வை
பலியாக்கிட
உடன்படவில்லை
என் உள்ளம் ... நீ
சந்தோசித்திருக்கனும்..
அதைக் கண்ட பின்னே
நானும் பூலோகம்
கடந்து மேலோகம்
செல்லனும்...

No comments:

Post a Comment