Saturday, December 24, 2016

 சுனாமி   

...............................  

 உன்னை 
ரொம்ப  பிடிக்கும் 
எனக்கு ...
உன்னைத் தொட்டு 
விளையாடினேன் 
சோர்வே தெரியல 
அள்ளிக் 
கொஞ்சினேன்
ஆசையும் தீரல.. 
உன்னைப்
 பார்க்கும் 
பொழுதினில் 
கண்னிமைக்க 
மறந்தேன்
உன் மடிதனில் 
வீற்றிருந்தேன் 
எந்தத் துயரமும் 
தெரியல.. 
நாளிகையும் 
கழியல... 
ஆனாலும் 
இப்பொழு
தெல்லாம் 
உன்னை 
நினைத்தாலே 
அச்சம் கொண்டு 
உள்ளம் 
பதைக்கிறது  
காரணம் 
தெரியுமா?
இது டிசம்பர் 
மாதமல்லவா,,,
இத்தகைய ஓர் 
டிசம்பர் மாதம் 
இருபாத்தாறாம் 
நாளில்தானே நீ என் 
சொந்தங்களை
எல்லாம்  அள்ளிச் 
சென்றாய் .. மீண்டும் 
தந்துவிடாதே 
இன்னுமோர் 
சோகமதை 
ஆண்டுகள் 
மாறினாலும் 
ஆறாத சோகத்தில் 
அன்றுபோல் 
இன்றும் நாங்கள் ..
ஆளிப்  பேரலையே 
மீண்டும் 
வந்துவிடாதே 
உன் எல்லை தாண்டி 
ஊருக்குள் ,,,,,,,,,,,,,!

No comments:

Post a Comment