Saturday, December 24, 2016

மொட்டாகி பூவாகி

செவ்விதழ்கள்
 அடுக்காய்
விரித்து சிரித்து
அழகின் வடிவாய்
மணங்கமழும் 
மனங்கவர்
சிவப்பு ரோஜாவே ,....!
ஏதோ சோகம் 
உன்னில்
பேதையிவள் 
காண்கிறேன்...
அது
முற்களின் 
நடுவே நீ
பூதுக்கிடப்பதாலா ...?
கவலை 
வேண்டாம்
சந்தோசித்திரு ..
அந்த 
முற்கள் காத்திடும்
உன்னை உன்
அன்னையவள் போல
சிவப்பு ரோஜாவே ....!

No comments:

Post a Comment