Saturday, December 24, 2016


சுட்டெரிக்கும்
சூரியனை
தினமும் காணலாம்
இரவு வரும் வரையில்
ஒளி தரும்
நிலவினை
நாள்தோறும் காணலாம்
அமாவாசை தவிர ....
கண் சிமிட்டும்
நட்சத்திரங்களை
கண் சிமிட்டாமல்
பார்க்கலாம்
பொழுது விடியும் வரை ..
அழகு
வானவில்லைக்
காணலாம் சில நொடிகள் ..
நீயில்லாத நொடிகளையும்
விடியலில்லா ஆகாயமாய்
இருளுக்குள் காண்கிறேன் .
செல்லமே நீ சென்ற இடம்
தெரியாமல் தவிக்கிறேன்
உன்னை கண்டிடவே ..
ஒளி தரும்
சூரியனாய் சந்திரனாய்
தாரகையாய் நீ வேண்டாம்
என்னுயிருக்குள் உயிராக
எப்போதும் எனக்குள்
நீ வேண்டும் என் வாழ்வு
ஒளிபெற ....

No comments:

Post a Comment