
இவ்வையகம்தன்னில்
பிறந்திட்ட யாவர்க்கும்
ஒன்றல்ல இரண்டல்ல
ஆயிரமாயிரம் கனவுகள்
மலர்ந்து மடிவதுண்டு ...
சில நிறைவேருவதுண்டு ..
ஆயினும்
என் கனவுகளோ
மொட்டாய்
அரும்பும்போதே
கருகி உதிர்ந்து போவது
உனக்குத் தெரியுமா ?
மண்ணோடு நான்
மாண்டாலும் .....
மாறாது மறையாது
என் இதயத்தின் வடுக்கள்
ஏனெனில் அதற்கு
ஔடதம் நீதானே ?
பிறந்திட்ட யாவர்க்கும்
ஒன்றல்ல இரண்டல்ல
ஆயிரமாயிரம் கனவுகள்
மலர்ந்து மடிவதுண்டு ...
சில நிறைவேருவதுண்டு ..
ஆயினும்
என் கனவுகளோ
மொட்டாய்
அரும்பும்போதே
கருகி உதிர்ந்து போவது
உனக்குத் தெரியுமா ?
மண்ணோடு நான்
மாண்டாலும் .....
மாறாது மறையாது
என் இதயத்தின் வடுக்கள்
ஏனெனில் அதற்கு
ஔடதம் நீதானே ?
No comments:
Post a Comment