Saturday, December 24, 2016


உள்ளமெனும்
வீட்டினிலே
சொல்ல முடியா
ஓர் எண்ணமதை
செவ்வனே 
மறைத்து
நானும்
பூட்டி வைத்தேன்
செம்மையாய் பேசி
பேதையிவள்
நெஞ்சமதை
திருடிச் சென்றவன்
இன்று எங்கே..?
கயவனே வந்தென்
இதயமதைத் திருப்பி
என்னிடமே
தந்துவிடு
காதலின் புனிதம்
சொல்லித் தந்தவரே
காதலியின் உயிரை
காலன் பறித்துச்
செல்வதை
காண ஏனடா 
செல்லம்
இத்தனை 
ஆர்வமுனக்கு
காலன்
அழைக்கும் முன்னே
இறந்துவிட்டேன்
 நான்
நீயெனை
சந்தேகித்த போதே ..
சிந்திக்கிறேன்
 இப்போது
நீயெனக்கு
வேண்டுமா
வேண்டாமா ?

No comments:

Post a Comment