
பரிவுடன் நோக்கி
பாசத்தைப்
பொழிந்தாய்
புன்னகையோடு
சந்தோசம் தந்தாய்
புன்னகைக்கவும்
செய்தாய்
அது அந்தக் காலம்
நெஞ்சில்
நெருப்பையும்
பார்வையில்
வெறுப்பையும்
வார்த்தையில்
வலியையும்
என் விழிகளிலே
கண்ணீரையும்
தருகிறாய்
இது இந்தக் காலம்
என் அன்பே
ஏன் இந்த மாற்றம்
பேதையிவள்
இழைத்திட்ட
குற்றம்தான் என்ன ?
சொல்லி விடு
என்னை நான்
திருத்திக் கொள்கிறேன்
இல்லையேல்
கொன்று எனை
மண்ணோடு
கலந்து விடு
சந்தோசிக்கிறேன்
நான்
அப்போதேனும் .....!!!Cool
No comments:
Post a Comment