கனவு
கனவென்னும்
மாளிகையின்
மாடியிலே நின்று
குதித்தேன் கனவுகளை
அக்கணமே
கொலை செய்துவிட்டு
சாதாரணமாய்
வாழ எண்ணி
ஆனாலும் அது
இறக்கவில்லையடா ...
மாடி மேலே மாடியாய்
மேலும் உயர்ந்து
பிரகாசித்துக் கேலி
செய்ததென்னை ..
ஏய் அற்பப் பெண்ணே!
என்னை அளிக்க
உன்னால்
முடியாதென்று .....
No comments:
Post a Comment