சுதந்திரமாய் பறந்தேன்
அது ஒரு காலம்
புத்தகப் பை
முதுகில் கணக்க
சுமையுடன் நடந்தேன்
அது ஒரு காலம்
நெஞ்சு நிறைய
காதலைச் சுமந்து
இன்பம் துன்பம் என
இரண்டையும்
மாறி மாறி அ
னுபவித்தேன்
அது சில காலம்...
ஆனால்
இவை யாவும்
இறந்த காலம்
ஒளடதச் சாலையும்
ஒளடதப்
பொட்டலமுமாய்
நடக்கிறேன்..
இது தான்
என் நிகழ காலம்
காலன் எனை
அழைக்கிறான் ..
தினங்களை நான்
கணக்கிடுகிறேன் ..
எண்ணி முடியும்
நாள் வெகு
தொலைவிலில்லை
ஆகவே இதுவே என்
நிகழ காலம் ,,,,
No comments:
Post a Comment