Saturday, December 24, 2016


மதி கெட்டுத்
தரி கெட்டுத்
தழும்புது 
நெஞ்சம்
மிதிபட்டு 
மிதி பட்டு
சிதையுண்டு
நொறுங்குது 
நெஞ்சம்
நொடி கூட 
மறவாமல்
வாழுது உன் எண்ணம்
ஓயாமல் 
குத்தி எனை
கொல்லுது
உன் மௌனம் ..
தவறாது தினம்தோறும்
அனுப்பிடு 
நீயும்
குறுந்தகவல் ...
தவறிடின் 
வந்திடும்
உனக்கோர் 
தந்திச் செய்தி
அதுதான் இவளின்
மரணச் செய்தி ...

No comments:

Post a Comment