தென்றலாய் வீசி வந்த
உன் நினைவுகளும்
மின்னலாய்ப் பறிபோன
என் இதயமும்
இதமாய்த் தேன் வார்த்த
உன் வார்த்தைகளும்
மழையாய்
நனைந்து போன
என் கண்களும்
தவமாய் தவமிருக்கும்
என் காதலும்
உனக்குப் புரியவில்லை
புரியும்போது
இந்த இயற்கையோடு
நானும் இருப்பேன்
அமைதியாய் சமாதியாக !
No comments:
Post a Comment