Friday, December 29, 2017

எறும்பூரக் 
கல்லும் 
கறையுமென்பார் 
பெண்ணென்றால்
 பேயும் 
 இறங்குமென்பார் 
என் 
கண்ணீர் கண்டு 
ஏனோ உன் 
இதயம் மட்டும் 
சற்றும் 
அசையவே 
இல்லையே !

Thursday, December 28, 2017

அடர்ந்த 
தோப்புக்குள்ளே 
தனி 
மரமானேன் 
உறவுகளிருந்தும் 
அனாதையானேன் 
சிறகுகளிருந்தும் 
பறக்க முடியாத 
ஊனமென்றானேன் 
மொழிகள் தெரிந்தும் 
மெளனியானேன் 
இத்தனையும் 
நீ எனை 
புரிந்து கொள்ளும் 
அந்த  
நொடிகளுக்காக

Tuesday, December 26, 2017

பத்தோடு 
மூன்றாண்டுகள்
பவ்வியமாய்க் 

கழிந்தாலும்
பல்லாயிரம் 

உயிர்களை
பாவம் பாராமல்
பறித்துச் 

சென்றிட்ட
பயங்கர 

நிமிடங்கள்
பதித்துப்போன 

தடங்கள் 
பல்லாண்டுகள் 

சென்றாலும்
மாறாதோ இந்த
சுனாமி தந்த
வடுவும் வலியும்...?

Friday, December 15, 2017


என் பிரியமான 
நித்திரையே !
இன்பமோ துன்பமோ 
இன்றுவரை கூடவே 
இருந்த நீயும் 
இப்படி விலகி 
இருந்தே என்னை 
சித்திரவதை செய்து 
சிறுக சிறுக 
வதம் செய்வதேன் ?

Tuesday, December 12, 2017

தன்னை 
புரிந்துகொள்ள 
யாரும் 
இல்லாதவர் 
எல்லாம் 
நிச்சயமாக 
என் போலவே 
அனாதைகள் 
தான்!
சுயநலம் மட்டுமே 
வியாபித்திருக்கும் 
இவ் 
வையகம்தானிலே 
நான் கண்ட 
அத்தனை 
உறவுகளும் 
போலியே...
உண்மை 
அன்பென்று 
இங்கு எதுவுமில்லை...
மெய் உறவென்றும் 
யாருமில்லை .....

Saturday, December 9, 2017

ஏழையாக 
படைத்தது 
இறைவன் தவறா 
ஏழைத்தாய்  தன் 
கருவில் உன்னை 
சுமந்தது  தவறா

ஏழையாய் 
ஜனனித்து 
ஏழ்மை மாறாது 
வாழ்வது தவறா

கூழும் கஞ்சியும் 
உன் உணவா ...
உடையில்லை 
உறையுளுமில்லை 
உருவம் மங்கிய 
உன் சரீரத்தில் 
உயிருள்ளபோதும் 
உன் விழிகளில் 
களையில்லை...

இதுதானோ 
உன் விதி 
அத்தனையும் 
காலத்தின் சதி 
என்று மாறும் 
இக்கதி ..

மாற்றத்திற்கு 
ஒன்றே வழி 
அதுவே உன் மதி !

Tuesday, December 5, 2017


கவிச் செடியிலே 
வார்த்தைகள் 
கொய்து 
உன்னை 
வர்ணிக்க 
சொற்களை 
சேகரித்து 
காகிதமாய் 
இதயம் திறந்து 
குறுதித் துளிகளை 
தூரிகையில் 
தொட்டு 
எழுத எடுத்ததும் 
கற்பனைக்கு 
எட்டவில்லை 
எந்த வரிகளும் ...
ஏனெனில் 
நீயே ஓர் 
கவிதை 
உனக்கெதற்கு 
இன்னுமோர் 
கவிதை?

Friday, December 1, 2017

  அண்ணலுக்காய் சில வரிகள்  

 அகிலத்திற்கோர்  
அருட்கொடையாய் 
அன்பின் திருவுருவாய்
அவதரித்த தூதரே
அண்ணல் நபியே!

உண்மையாளராய்
நம்பிக்கைக்குரியவராய்
பாவங்களே செய்யாது
பாவிகலெமக்கு
பாவத்தினின்றும்
தூரமாக நல்
வழிகள் சொன்னீர்களே..!

அனாதையாய்
வளர்ந்தீர்களே
அனாதைகளை ஆதரிக்க
கற்றுத் தந்தீர்களே
கொலை களவு சூது
பாவமென்றீர்களே
ஹதீஸுகளை
மொழிந்தீர்களே
அதன்படி வாழ்ந்தும்
காட்டினீர்களே !

எழுத்தறிவில்லா
உம்மி நபியே
தாங்கள்
இல்லையேல்
திருக் குரானும்
இல்லையே
ஐங்காலத்
தொழுகையும்
இல்லையே !

ரபிய்யுல் அவ்வல்
பன்னிரெண்டாம்
நாளிலிலே ஜனனித்த
ரபிய்யுல் அவ்வல்
பன்னிரெண்டாம்
நாளிலிலே
இறையடியும்
எய்தினீரே !

உங்கள்
உம்மத்துக்களாம்
எம்மை இம்மையிலே
ஈமானுடன் வாழ
வழி சொன்ன ஏந்தலே
யா ரசூலே ...

மறுமையிலும்
நமக்காய் யா உம்மத்தி
யா உம்மத்தி என்று
பிரார்த்திப்பவர் தாங்களே\
அல்லாஹ்விடம்
எமக்காய் மன்றாடி
நரகத் தீயிலிருந்து மீட்க
மன்றாடுபவரே ..
சுவனத்துள்  முதலில்
நுழைபவரே !

மகிழ்கிறோம்
இந்நாளில் தங்கள்
உம்மத்துக்களாய்
இம்மண்ணில்
அவதரித்தோமென்று..

கண்ணீர் சிந்தி
கவலை கொள்கிறோம்
தங்களை தரிசிக்க
பாக்கியமின்றி
நவீன யுகத்தில்
பிறந்துவிட்டோமென்று ..

யா அல்லாஹ்
மறுமைதனிலே
மா நபியை
தரிசிக்கும் அந்த
திருநாளை எமக்கு
பாக்கியமாக்கித்
தந்துவிடு ரஹ்மானே!
இன்ஷா அல்லாஹ்

Thursday, November 30, 2017

 எந்த ஒளடதம் 
கொண்டு 
மறைக்க 
முயன்றாலும் 
சில சொல் 
வீச்சுக்களால் 
இதயத்தில் 
ஏற்படுத்தப்படும் 
ரணங்களின் 
தடங்களை 
மறைக்க 
முடியவில்லையே!

Monday, November 27, 2017


வாழ்க்கை எனும்
களத்தின்
வேள்விக்குள்ளே
சிக்குண்டு
சிதறிப்போன
என் இதயமும்
இமைக்க மறுக்கும்
என் விழிகளும்
இன்றும்
சரணடையத்
துடிக்குது உன்
நிழலில் மட்டும் ....
என் உயிர்த் 
தோழி நீதான்
உனக்குள்

 நானும்
 ஓவ்வொரு
காலைப் பொழுதும்
சங்கமித்து

 பெற்றிட்ட
அழியாச் 

செல்வமாம்
கல்வியதும் 

ஆசான்களின்
ஒப்பற்ற 

ன்பும் இன்றும்
என் பசுமையான
நினைவலைகளில் ....
என்றும் மாறாத
இனிமையான 

பொழுதுகள்..
உன்னை நேசிக்கும்
அதே நொடி 

வெறுக்கிறேன்
அந்த இறுதி 

பரீட்சைதனை
உன்னை விட்டும் 

என்னைத்
தூரமாக்கியதால் ...!

சந்தேகம் இருக்குமிடத்தில் சந்தோசம் நிலைக்காது ..

என் வாழ்க்கைப் 
புத்தகத்தின்  கடைசி 
அத்தியாயமிது இருண்ட காட்டின் 
முற் புதருக்குள்ளே 
சிக்கிட்ட 
முயல் போல 
வாழ்வுக்கும் 
மரணத்துக்கும் 
இடை நடுவே 
போராட்டம்....
சந்தேகம் 
நர்த்தனமாடி     
குற்றமறியா 
நெஞ்சமதை 
அம்பென பாய்ந்து 
ரணமாக்க ...
போராடிப் 
பயனில்லை என 
கண்ணீர் வற்றிப் 
போன பின்னும் 
 உயிரிருந்தும் 
நடைப்பிணமானேன் 
ஆகையால் இன்று 
வடிக்கிறேன் என் 
இறுதிக் கவியதை !



கத்தியின்றி
ரத்தமின்றி
மயக்க
ஊசியின்றி
இதயங்கள்
இடமாற்றம்
செய்யப்படும்
சத்திர
சிகிச்சைதான்
காதல்..
வலிக்காமல்
இடம் மாறும்
இதயங்கள்
வலிக்க வலிக்க
பிடுங்கி
எடுக்கப்படுவதும்
காதல்தான் .....

நிச்சயமாக
இவ் உலகிலேயே
பலம் வாய்ந்தது
என் இதயம் தான்
இடியென விழும்
உன்
வாத்தைகளைக்
கேட்டும்
உறுதியாய்
இருக்கிறதே!
உன் பார்வை
உன் வார்த்தை
உன் செயல்கள்
எதிலுமில்லை
என் மீதான
நம்பிக்கை ..
உன்னிதயத்தின்
ஓர் ஓரத்தில் மட்டும்
சந்தேகமிருந்தால்
அது யதார்த்தம் ...
ஆனாலும் அது
உன் இதயம்
முழுவதும்
பரவி விட்டதே
புற்றுநோய் போல ......

உன்னை விட 
பத்திரமாய் 
என்னைப் 
பாதுகாப்பவர் 
யாருமில்லையம்மா 
சுயநலம் மட்டுமே 
வளர்ந்து 
கானகமாய் 
மாறியிருக்கும் 
இப் பாரினிலே
என்னதான் 
தாய் 
கண்ணீர் 
விட்டுக் 
கதறியழுதாலும் 
கலங்காது 
சேய் மனது ...
ஆனாலும் 
என்ன விந்தை 
சிறு கீறல் தன் 
சேய் மீது 
பட்டாலும் 
துடி துடித்துப் 
போகுதே 
அன்னை 
நெஞ்சம் ....

Saturday, November 25, 2017

கூந்தல் விரித்து 
இதழ்களுக்கு 
சாயம் பூசி 
அரிதாரமிட்டு 
கண் மை தீட்டிய 
பெண்ணே !

உன்னை 
நிகாபுக்குள் 
மறைத்துப் பார் 
அகிலம் போற்றும் 
சுவர்க்கமே 
உன்னை 
வரவேற்கும் ....

Thursday, November 23, 2017

வாழ்க்கை எனும் 
சிறைதனிலே 
பெண் என்பவள் 
விடுதலையே இல்லா 
ஆயுள் கைதிதான் 
அதில் 
தண்டனையும் 
அனுபவம்தான் 
பாடமும் 
அனுபவம்தான் 
தண்டிப்பவர்கள்தான் 
வேறு வேறு !

Wednesday, November 22, 2017

கவிதை சிலருக்கு 
புகழ் சேர்க்கிறது 
சிலர் 
காதலை சொல்ல 
கவிதை தூதாகிறது 
எனக்கோ இது 
வரப்பிரசாதம் .....
ஏனெனில் 
தோழியாய் 
தாயாய் 
தந்தையாய் 
என் 
துயரங்களுக்கு 
ஆறுதலாய்  என் 
சிறு வயது முதல் 
இன்றும்  விலகாமல் 
கூடவே 
இருக்கின்றதே ....
என்னைப் 
புரிந்துகொள்ள 
இதுவரை யாரும் 
அவதரிக்கவில்லை 
இவ் வையகத்திலே 
இனி அவதரித்ததும் 
பயனில்லை 
இவள் வாழ்விலே...
எல்லாமே இழந்த பின் 
வாழ்வும் எதற்கு 
இம் மண்ணிலே?
என் 
வேண்டுதலெல்லாம் 
இனி 
மரணமொன்றுதான்...
மரணமே 
வந்தென்னைத் 
தழுவிக்கொள் ...

Monday, November 20, 2017

அழுகின்ற 
மனதும் 
சிரிக்கின்ற 
இதழ்களும் 
எனக்கு மட்டும் 
வரமா சாபாமா 
புரியவில்லையே !

Sunday, November 19, 2017

சில 
வேதனைகளை
புன்னகைத் 

திரையிட்டு
மறைத்தாலும் ... 

என்
விழிகள் மட்டும்
காட்டிக் 

கொடுக்கிறதே!.
எனக்கென 
யாருமில்லை
என்
வலிகளைச் 

சொல்ல,
ஆகையால்,

அழுகின்றேன்
நானும் மழையில்,
ஏனெனில்,
அப்போதுதான்
என் கண்ணீரை
யாரும் காண 

முடியாது

Wednesday, November 15, 2017

உன் மீது
நான் கொண்ட
நேசமத்தில்
என்னதான்
உண்மையாய்

தூய்மையாய்
இருந்தாலும்
இன்னும் நீ
என்னை
நம்பவில்லை என
உன் விழிகள்
அப்படியே படம்
போட்டுக்
காட்டுவதை
நான் மட்டுமே
அறிவேன்.
..
உன் நாவில் என்ன
ஈயத்தையா காய்த்து
வைத்திருக்கிறாய்......
உன் சுடும்
வார்த்தைகள் கேட்டு
என் இதயமே
கருகி பொசிந்து
உருகிப் போனதே......
உன் மடிதனிலே
தலை சாய்த்து
உன் விரல்கள்
என் சிரசை நீவ
துயரங்கள் மறந்து
சந்தோசமாய்
நிம்மதியாய்
உறங்க வேண்டும்
அம்மா உன்
மடி கொடு சிறு
நாளிகையேனும்
துயில்கிறேன்
நிம்மதியாய் சிறு
குழந்தை போல.....
முகம் தெரியாத
தேவதை உன்னை
முழு நாளிகையும்
எண்ணியதாலோ
என்னவோ
நானும்
தொலைத்தேன்
என் முகவரியை ,,,,,,
உன் முகம்
காட்டு பெண்ணே
விழி பார்த்தே
வழி
தேடிக் கொள்கிறேன்
சிறு குறைகள் இருந்தும்
சந்தோசித்திருந்தேன்
தாய் வீட்டில்... பின்
கரம் பற்றியவரை
எண்ணி மகிழ்ந்தேன்...
ஆயினும் சொல்லொனா
அல்லல்கள் கண்டேன்
புகுந்த இல்லமதில்...
யாவும் விதியென்று
எண்ணி உள்ளே
அழுது வெளியே
சிரிக்கக் கற்றேன்
சந்தேகத்தின்
பிடிதனிலே
விடுதலையின்றி
சிறைப்பட்டேன் ...
சிறு இதயமதை
சிதறடிக்கும்
வார்த்தைகள் கேட்டு
மனம் வெதும்பினேன் ...
சுதந்திரமடைந்த
நாட்டில் இன்னும்
நான் சிறகு
உடைக்கப்பட்ட
கிளி தான் ....நிதமும்
தவிக்கிறேன்
பொருமையுடனே
சிரிக்கவும் முடியாமல்
அழவும் முடியாமல்
காலன் என்னை
அழைக்கும் வரை....
சில வலிகள் ....
சில தேவைகள்....
நாமாக சொல்லி
தெரிவதை விட
நமக்கானவர்கள்
தாமாக புரிந்து
நடக்கும்போது
நம்மை விட
அதிஷ்டசாலிகள்
வையகத்திலில்லை
ஆனாலும் நான்
அதிஷ்டசாலி

இல்லை ....

அன்பின்
விளை நிலமாய்
பாசத்தின்
உறைவிடமாய்
பராமரிப்பதிலும்
பாதுகாப்பதிலும்
கடவுளாய்
தானீன்ற
செல்வதத்துக்காய்
தன் இடுக்கண்
மறந்து
பாலூட்டி சீராட்டிய
சுமைதாங்கியே
என்னுயிரே...
உன் தள்ளாத
வயதிலும்
பிள்ளைக்காய்
உருகும் உன்
அன்பெங்கே
உன் திரு மகள்
அன்பெங்கே...
ஈடேதும்
இல்லையம்மா
உன் அன்புக்கு
இணையாக
ஈன்ற பிள்ளை 
இறக்கும் வரை 
இன்பமாய் 
காத்திடுவான் 
இரக்கமாய் 
இல்லையென்றாலும் 
இல்லத்திலேனும் 
இடம் தருவான் 
என்றெண்ணி 
பாசத்தை மட்டுமே 
பொழிந்து 
வளர்த்தாயே 
இன்று உன்னையே 
இரக்க 
வைத்துவிட்டானோ 
உன் பிள்ளை ????