Friday, December 29, 2017
Saturday, December 9, 2017
ஏழையாக
படைத்தது
இறைவன் தவறா
ஏழைத்தாய் தன்
கருவில் உன்னை
சுமந்தது தவறா
ஏழையாய்
ஜனனித்து
ஏழ்மை மாறாது
வாழ்வது தவறா
கூழும் கஞ்சியும்
உன் உணவா ...
உடையில்லை
உறையுளுமில்லை
உருவம் மங்கிய
உன் சரீரத்தில்
உயிருள்ளபோதும்
உன் விழிகளில்
களையில்லை...
இதுதானோ
உன் விதி
அத்தனையும்
காலத்தின் சதி
என்று மாறும்
இக்கதி ..
மாற்றத்திற்கு
ஒன்றே வழி
அதுவே உன் மதி !
படைத்தது
இறைவன் தவறா
ஏழைத்தாய் தன்
கருவில் உன்னை
சுமந்தது தவறா
ஏழையாய்
ஜனனித்து
ஏழ்மை மாறாது
வாழ்வது தவறா
கூழும் கஞ்சியும்
உன் உணவா ...
உடையில்லை
உறையுளுமில்லை
உருவம் மங்கிய
உன் சரீரத்தில்
உயிருள்ளபோதும்
உன் விழிகளில்
களையில்லை...
இதுதானோ
உன் விதி
அத்தனையும்
காலத்தின் சதி
என்று மாறும்
இக்கதி ..
மாற்றத்திற்கு
ஒன்றே வழி
அதுவே உன் மதி !
Friday, December 1, 2017
அண்ணலுக்காய் சில வரிகள்
அகிலத்திற்கோர்
அருட்கொடையாய்
அன்பின் திருவுருவாய்
அவதரித்த தூதரே
உண்மையாளராய்
நம்பிக்கைக்குரியவராய்
பாவங்களே செய்யாது
பாவிகலெமக்கு
பாவத்தினின்றும்
தூரமாக நல்
வழிகள் சொன்னீர்களே..!
அனாதையாய்
வளர்ந்தீர்களே
அனாதைகளை ஆதரிக்க
கற்றுத் தந்தீர்களே
கொலை களவு சூது
பாவமென்றீர்களே
ஹதீஸுகளை
மொழிந்தீர்களே
அதன்படி வாழ்ந்தும்
காட்டினீர்களே !
எழுத்தறிவில்லா
உம்மி நபியே
தாங்கள்
இல்லையேல்
திருக் குரானும்
இல்லையே
ஐங்காலத்
தொழுகையும்
இல்லையே !
ரபிய்யுல் அவ்வல்
பன்னிரெண்டாம்
நாளிலிலே ஜனனித்த
ரபிய்யுல் அவ்வல்
பன்னிரெண்டாம்
நாளிலிலே
இறையடியும்
எய்தினீரே !
உங்கள்
உம்மத்துக்களாம்
எம்மை இம்மையிலே
ஈமானுடன் வாழ
வழி சொன்ன ஏந்தலே
யா ரசூலே ...
மறுமையிலும்
நமக்காய் யா உம்மத்தி
யா உம்மத்தி என்று
பிரார்த்திப்பவர் தாங்களே\
அல்லாஹ்விடம்
எமக்காய் மன்றாடி
நரகத் தீயிலிருந்து மீட்க
மன்றாடுபவரே ..
சுவனத்துள் முதலில்
நுழைபவரே !
மகிழ்கிறோம்
இந்நாளில் தங்கள்
உம்மத்துக்களாய்
இம்மண்ணில்
அவதரித்தோமென்று..
கண்ணீர் சிந்தி
கவலை கொள்கிறோம்
தங்களை தரிசிக்க
பாக்கியமின்றி
நவீன யுகத்தில்
பிறந்துவிட்டோமென்று ..
யா அல்லாஹ்
மறுமைதனிலே
மா நபியை
தரிசிக்கும் அந்த
திருநாளை எமக்கு
பாக்கியமாக்கித்
தந்துவிடு ரஹ்மானே!
இன்ஷா அல்லாஹ்
Monday, November 27, 2017
என் உயிர்த்
தோழி நீதான்
உனக்குள்
நானும்
ஓவ்வொரு
காலைப் பொழுதும்
சங்கமித்து
பெற்றிட்ட
அழியாச்
செல்வமாம்
கல்வியதும்
ஆசான்களின்
ஒப்பற்ற
அன்பும் இன்றும்
என் பசுமையான
நினைவலைகளில் ....
என்றும் மாறாத
இனிமையான
பொழுதுகள்..
உன்னை நேசிக்கும்
அதே நொடி
வெறுக்கிறேன்
அந்த இறுதி
பரீட்சைதனை
உன்னை விட்டும்
என்னைத்
தூரமாக்கியதால் ...!
தோழி நீதான்
உனக்குள்
நானும்
ஓவ்வொரு
காலைப் பொழுதும்
சங்கமித்து
பெற்றிட்ட
அழியாச்
செல்வமாம்
கல்வியதும்
ஆசான்களின்
ஒப்பற்ற
அன்பும் இன்றும்
என் பசுமையான
நினைவலைகளில் ....
என்றும் மாறாத
இனிமையான
பொழுதுகள்..
உன்னை நேசிக்கும்
அதே நொடி
வெறுக்கிறேன்
அந்த இறுதி
பரீட்சைதனை
உன்னை விட்டும்
என்னைத்
தூரமாக்கியதால் ...!
சந்தேகம் இருக்குமிடத்தில் சந்தோசம் நிலைக்காது ..
என் வாழ்க்கைப்
புத்தகத்தின் கடைசி
அத்தியாயமிது இருண்ட காட்டின்
முற் புதருக்குள்ளே
சிக்கிட்ட
முயல் போல
வாழ்வுக்கும்
மரணத்துக்கும்
இடை நடுவே
போராட்டம்....
சந்தேகம்
நர்த்தனமாடி
குற்றமறியா
நெஞ்சமதை
அம்பென பாய்ந்து
ரணமாக்க ...
போராடிப்
பயனில்லை என
கண்ணீர் வற்றிப்
போன பின்னும்
உயிரிருந்தும்
நடைப்பிணமானேன்
ஆகையால் இன்று
வடிக்கிறேன் என்
இறுதிக் கவியதை !
உயிரிருந்தும்
நடைப்பிணமானேன்
ஆகையால் இன்று
வடிக்கிறேன் என்
இறுதிக் கவியதை !
Wednesday, November 15, 2017
சிறு குறைகள் இருந்தும்
சந்தோசித்திருந்தேன்
தாய் வீட்டில்... பின்
கரம் பற்றியவரை
எண்ணி மகிழ்ந்தேன்...
ஆயினும் சொல்லொனா
அல்லல்கள் கண்டேன்
புகுந்த இல்லமதில்...
யாவும் விதியென்று
எண்ணி உள்ளே
அழுது வெளியே
சிரிக்கக் கற்றேன்
சந்தேகத்தின்
பிடிதனிலே
விடுதலையின்றி
சிறைப்பட்டேன் ...
சிறு இதயமதை
சிதறடிக்கும்
வார்த்தைகள் கேட்டு
மனம் வெதும்பினேன் ...
சுதந்திரமடைந்த
நாட்டில் இன்னும்
நான் சிறகு
உடைக்கப்பட்ட
கிளி தான் ....நிதமும்
தவிக்கிறேன்
பொருமையுடனே
சிரிக்கவும் முடியாமல்
அழவும் முடியாமல்
காலன் என்னை
அழைக்கும் வரை....
சந்தோசித்திருந்தேன்
தாய் வீட்டில்... பின்
கரம் பற்றியவரை
எண்ணி மகிழ்ந்தேன்...
ஆயினும் சொல்லொனா
அல்லல்கள் கண்டேன்
புகுந்த இல்லமதில்...
யாவும் விதியென்று
எண்ணி உள்ளே
அழுது வெளியே
சிரிக்கக் கற்றேன்
சந்தேகத்தின்
பிடிதனிலே
விடுதலையின்றி
சிறைப்பட்டேன் ...
சிறு இதயமதை
சிதறடிக்கும்
வார்த்தைகள் கேட்டு
மனம் வெதும்பினேன் ...
சுதந்திரமடைந்த
நாட்டில் இன்னும்
நான் சிறகு
உடைக்கப்பட்ட
கிளி தான் ....நிதமும்
தவிக்கிறேன்
பொருமையுடனே
சிரிக்கவும் முடியாமல்
அழவும் முடியாமல்
காலன் என்னை
அழைக்கும் வரை....
Monday, November 13, 2017
Subscribe to:
Posts (Atom)