அண்ணலுக்காய் சில வரிகள்
அகிலத்திற்கோர்
அருட்கொடையாய்
அன்பின் திருவுருவாய்
அவதரித்த தூதரே
உண்மையாளராய்
நம்பிக்கைக்குரியவராய்
பாவங்களே செய்யாது
பாவிகலெமக்கு
பாவத்தினின்றும்
தூரமாக நல்
வழிகள் சொன்னீர்களே..!
அனாதையாய்
வளர்ந்தீர்களே
அனாதைகளை ஆதரிக்க
கற்றுத் தந்தீர்களே
கொலை களவு சூது
பாவமென்றீர்களே
ஹதீஸுகளை
மொழிந்தீர்களே
அதன்படி வாழ்ந்தும்
காட்டினீர்களே !
எழுத்தறிவில்லா
உம்மி நபியே
தாங்கள்
இல்லையேல்
திருக் குரானும்
இல்லையே
ஐங்காலத்
தொழுகையும்
இல்லையே !
ரபிய்யுல் அவ்வல்
பன்னிரெண்டாம்
நாளிலிலே ஜனனித்த
ரபிய்யுல் அவ்வல்
பன்னிரெண்டாம்
நாளிலிலே
இறையடியும்
எய்தினீரே !
உங்கள்
உம்மத்துக்களாம்
எம்மை இம்மையிலே
ஈமானுடன் வாழ
வழி சொன்ன ஏந்தலே
யா ரசூலே ...
மறுமையிலும்
நமக்காய் யா உம்மத்தி
யா உம்மத்தி என்று
பிரார்த்திப்பவர் தாங்களே\
அல்லாஹ்விடம்
எமக்காய் மன்றாடி
நரகத் தீயிலிருந்து மீட்க
மன்றாடுபவரே ..
சுவனத்துள் முதலில்
நுழைபவரே !
மகிழ்கிறோம்
இந்நாளில் தங்கள்
உம்மத்துக்களாய்
இம்மண்ணில்
அவதரித்தோமென்று..
கண்ணீர் சிந்தி
கவலை கொள்கிறோம்
தங்களை தரிசிக்க
பாக்கியமின்றி
நவீன யுகத்தில்
பிறந்துவிட்டோமென்று ..
யா அல்லாஹ்
மறுமைதனிலே
மா நபியை
தரிசிக்கும் அந்த
திருநாளை எமக்கு
பாக்கியமாக்கித்
தந்துவிடு ரஹ்மானே!
இன்ஷா அல்லாஹ்
No comments:
Post a Comment