சந்தேகம் இருக்குமிடத்தில் சந்தோசம் நிலைக்காது ..
என் வாழ்க்கைப்
புத்தகத்தின் கடைசி
அத்தியாயமிது இருண்ட காட்டின்
முற் புதருக்குள்ளே
சிக்கிட்ட
முயல் போல
வாழ்வுக்கும்
மரணத்துக்கும்
இடை நடுவே
போராட்டம்....
சந்தேகம்
நர்த்தனமாடி
குற்றமறியா
நெஞ்சமதை
அம்பென பாய்ந்து
ரணமாக்க ...
போராடிப்
பயனில்லை என
கண்ணீர் வற்றிப்
போன பின்னும்
உயிரிருந்தும்
நடைப்பிணமானேன்
ஆகையால் இன்று
வடிக்கிறேன் என்
இறுதிக் கவியதை !
உயிரிருந்தும்
நடைப்பிணமானேன்
ஆகையால் இன்று
வடிக்கிறேன் என்
இறுதிக் கவியதை !
No comments:
Post a Comment