Wednesday, November 15, 2017

சிறு குறைகள் இருந்தும்
சந்தோசித்திருந்தேன்
தாய் வீட்டில்... பின்
கரம் பற்றியவரை
எண்ணி மகிழ்ந்தேன்...
ஆயினும் சொல்லொனா
அல்லல்கள் கண்டேன்
புகுந்த இல்லமதில்...
யாவும் விதியென்று
எண்ணி உள்ளே
அழுது வெளியே
சிரிக்கக் கற்றேன்
சந்தேகத்தின்
பிடிதனிலே
விடுதலையின்றி
சிறைப்பட்டேன் ...
சிறு இதயமதை
சிதறடிக்கும்
வார்த்தைகள் கேட்டு
மனம் வெதும்பினேன் ...
சுதந்திரமடைந்த
நாட்டில் இன்னும்
நான் சிறகு
உடைக்கப்பட்ட
கிளி தான் ....நிதமும்
தவிக்கிறேன்
பொருமையுடனே
சிரிக்கவும் முடியாமல்
அழவும் முடியாமல்
காலன் என்னை
அழைக்கும் வரை....

No comments:

Post a Comment