Saturday, December 9, 2017

ஏழையாக 
படைத்தது 
இறைவன் தவறா 
ஏழைத்தாய்  தன் 
கருவில் உன்னை 
சுமந்தது  தவறா

ஏழையாய் 
ஜனனித்து 
ஏழ்மை மாறாது 
வாழ்வது தவறா

கூழும் கஞ்சியும் 
உன் உணவா ...
உடையில்லை 
உறையுளுமில்லை 
உருவம் மங்கிய 
உன் சரீரத்தில் 
உயிருள்ளபோதும் 
உன் விழிகளில் 
களையில்லை...

இதுதானோ 
உன் விதி 
அத்தனையும் 
காலத்தின் சதி 
என்று மாறும் 
இக்கதி ..

மாற்றத்திற்கு 
ஒன்றே வழி 
அதுவே உன் மதி !

No comments:

Post a Comment