Thursday, November 30, 2017
Monday, November 27, 2017
என் உயிர்த்
தோழி நீதான்
உனக்குள்
நானும்
ஓவ்வொரு
காலைப் பொழுதும்
சங்கமித்து
பெற்றிட்ட
அழியாச்
செல்வமாம்
கல்வியதும்
ஆசான்களின்
ஒப்பற்ற
அன்பும் இன்றும்
என் பசுமையான
நினைவலைகளில் ....
என்றும் மாறாத
இனிமையான
பொழுதுகள்..
உன்னை நேசிக்கும்
அதே நொடி
வெறுக்கிறேன்
அந்த இறுதி
பரீட்சைதனை
உன்னை விட்டும்
என்னைத்
தூரமாக்கியதால் ...!
தோழி நீதான்
உனக்குள்
நானும்
ஓவ்வொரு
காலைப் பொழுதும்
சங்கமித்து
பெற்றிட்ட
அழியாச்
செல்வமாம்
கல்வியதும்
ஆசான்களின்
ஒப்பற்ற
அன்பும் இன்றும்
என் பசுமையான
நினைவலைகளில் ....
என்றும் மாறாத
இனிமையான
பொழுதுகள்..
உன்னை நேசிக்கும்
அதே நொடி
வெறுக்கிறேன்
அந்த இறுதி
பரீட்சைதனை
உன்னை விட்டும்
என்னைத்
தூரமாக்கியதால் ...!
சந்தேகம் இருக்குமிடத்தில் சந்தோசம் நிலைக்காது ..
என் வாழ்க்கைப்
புத்தகத்தின் கடைசி
அத்தியாயமிது இருண்ட காட்டின்
முற் புதருக்குள்ளே
சிக்கிட்ட
முயல் போல
வாழ்வுக்கும்
மரணத்துக்கும்
இடை நடுவே
போராட்டம்....
சந்தேகம்
நர்த்தனமாடி
குற்றமறியா
நெஞ்சமதை
அம்பென பாய்ந்து
ரணமாக்க ...
போராடிப்
பயனில்லை என
கண்ணீர் வற்றிப்
போன பின்னும்
உயிரிருந்தும்
நடைப்பிணமானேன்
ஆகையால் இன்று
வடிக்கிறேன் என்
இறுதிக் கவியதை !
உயிரிருந்தும்
நடைப்பிணமானேன்
ஆகையால் இன்று
வடிக்கிறேன் என்
இறுதிக் கவியதை !
Wednesday, November 15, 2017
சிறு குறைகள் இருந்தும்
சந்தோசித்திருந்தேன்
தாய் வீட்டில்... பின்
கரம் பற்றியவரை
எண்ணி மகிழ்ந்தேன்...
ஆயினும் சொல்லொனா
அல்லல்கள் கண்டேன்
புகுந்த இல்லமதில்...
யாவும் விதியென்று
எண்ணி உள்ளே
அழுது வெளியே
சிரிக்கக் கற்றேன்
சந்தேகத்தின்
பிடிதனிலே
விடுதலையின்றி
சிறைப்பட்டேன் ...
சிறு இதயமதை
சிதறடிக்கும்
வார்த்தைகள் கேட்டு
மனம் வெதும்பினேன் ...
சுதந்திரமடைந்த
நாட்டில் இன்னும்
நான் சிறகு
உடைக்கப்பட்ட
கிளி தான் ....நிதமும்
தவிக்கிறேன்
பொருமையுடனே
சிரிக்கவும் முடியாமல்
அழவும் முடியாமல்
காலன் என்னை
அழைக்கும் வரை....
சந்தோசித்திருந்தேன்
தாய் வீட்டில்... பின்
கரம் பற்றியவரை
எண்ணி மகிழ்ந்தேன்...
ஆயினும் சொல்லொனா
அல்லல்கள் கண்டேன்
புகுந்த இல்லமதில்...
யாவும் விதியென்று
எண்ணி உள்ளே
அழுது வெளியே
சிரிக்கக் கற்றேன்
சந்தேகத்தின்
பிடிதனிலே
விடுதலையின்றி
சிறைப்பட்டேன் ...
சிறு இதயமதை
சிதறடிக்கும்
வார்த்தைகள் கேட்டு
மனம் வெதும்பினேன் ...
சுதந்திரமடைந்த
நாட்டில் இன்னும்
நான் சிறகு
உடைக்கப்பட்ட
கிளி தான் ....நிதமும்
தவிக்கிறேன்
பொருமையுடனே
சிரிக்கவும் முடியாமல்
அழவும் முடியாமல்
காலன் என்னை
அழைக்கும் வரை....
Monday, November 13, 2017
Subscribe to:
Posts (Atom)