Thursday, September 20, 2018
Saturday, September 15, 2018
உடன் பிறப்பென்று
உளமாற மகிழ்ந்திருந்தேன்
உள்ளம் வலிக்க சொல்
உளி கொண்டு நீயும்
உயிரில் செதுக்கி
உறவு துண்டித்தாய்
உயிருள்ளவரை இனி
உன் சகவாசம்
வேண்டாமென
ஊமையாகிட
எண்ணினேன்
உறவுகளை துண்டித்து
வாழ்ந்தால் நான்
உண்மை முஸ்லிமல்லவே ....
உனக்காக அல்ல என்
உன்னத மார்க்கத்துக்காக
உறவானேன் மீண்டும்
உன்னுடன் என்
உடன் பிறப்பே !
உளமாற மகிழ்ந்திருந்தேன்
உள்ளம் வலிக்க சொல்
உளி கொண்டு நீயும்
உயிரில் செதுக்கி
உறவு துண்டித்தாய்
உயிருள்ளவரை இனி
உன் சகவாசம்
வேண்டாமென
ஊமையாகிட
எண்ணினேன்
உறவுகளை துண்டித்து
வாழ்ந்தால் நான்
உண்மை முஸ்லிமல்லவே ....
உனக்காக அல்ல என்
உன்னத மார்க்கத்துக்காக
உறவானேன் மீண்டும்
உன்னுடன் என்
உடன் பிறப்பே !
Thursday, April 26, 2018
கொடிய வெயிலில்
கடும் மழையிலே
காடு மலைகளிலே
கொழுந்து பறித்தே
கைகள் காய்ச்சிப்போக
கால்(அரை) வயிறுமாய்
பட்டிணி கிடந்தே
கஷ்ட்டங்கள் தாங்கி
வளர்த்தாயம்மா..
கல்வியிலே நீ
கொடிகட்டிப் பறந்திடு
கடவுளென்றும்
கண்மணியுனக்கு
கருணை காட்டுவார்
கல்வியை நன்றாய்
கற்றிடு என
கனிவாயுரைத்தெனை
கன்னியமாய் வளர்த்திட
என் அன்னையவள்க்கு
ஈடாகுமா அவனியின்
எந்த உறவும்.. உன்னாசை
காப்பேனம்மா
கவலை வேண்டாம்
கலங்காதே ....
கடும் மழையிலே
காடு மலைகளிலே
கொழுந்து பறித்தே
கைகள் காய்ச்சிப்போக
கால்(அரை) வயிறுமாய்
பட்டிணி கிடந்தே
கஷ்ட்டங்கள் தாங்கி
வளர்த்தாயம்மா..
கல்வியிலே நீ
கொடிகட்டிப் பறந்திடு
கடவுளென்றும்
கண்மணியுனக்கு
கருணை காட்டுவார்
கல்வியை நன்றாய்
கற்றிடு என
கனிவாயுரைத்தெனை
கன்னியமாய் வளர்த்திட
என் அன்னையவள்க்கு
ஈடாகுமா அவனியின்
எந்த உறவும்.. உன்னாசை
காப்பேனம்மா
கவலை வேண்டாம்
கலங்காதே ....
Sunday, April 22, 2018
உண்ண முடியாமல்
உறங்க முடியாமல்
அவதியுற்றே
தொண்டைக்குள்
சென்றதெல்லாம்
வாந்தியாக்கி
என் உதைகளைக் கூட
வரமெனத் தாங்கி.. ஐயிரு
மாதங்கள் சுமையென்று
க்ஷணமும் எண்ணாது
துடியென துடித்து
உயிர் பணயம் வைத்து
ஈன்றாயம்மா...
உதிரத்தைப் பாலாய்
அன்பினைத் தேனாய்
அறிவை உணவாய்
ஊட்டி உன்
கண்ணுக்குள் வைத்தே
காத்தாயம்மா... கண்கள்
குளமாக இன்றும்
எண்ணி வியக்கிறேனம்மா
உன் அர்ப்பணிப்புக்களை...
ஈடேதுமில்லா உனக்கு
கைமாறென
என் செய்வேனோ ???
உறங்க முடியாமல்
அவதியுற்றே
தொண்டைக்குள்
சென்றதெல்லாம்
வாந்தியாக்கி
என் உதைகளைக் கூட
வரமெனத் தாங்கி.. ஐயிரு
மாதங்கள் சுமையென்று
க்ஷணமும் எண்ணாது
துடியென துடித்து
உயிர் பணயம் வைத்து
ஈன்றாயம்மா...
உதிரத்தைப் பாலாய்
அன்பினைத் தேனாய்
அறிவை உணவாய்
ஊட்டி உன்
கண்ணுக்குள் வைத்தே
காத்தாயம்மா... கண்கள்
குளமாக இன்றும்
எண்ணி வியக்கிறேனம்மா
உன் அர்ப்பணிப்புக்களை...
ஈடேதுமில்லா உனக்கு
கைமாறென
என் செய்வேனோ ???
Tuesday, April 17, 2018

என்னை விட்டும்
பிரிந்த அந்தநாள்
இன்றும் மறக்கவில்லை..
கை பிடித்தென்னை
அழைத்துச் சென்று
வகுப்பறைக்குள் விட்டு
கண் கலங்க
அம்மா திரும்பிட
நானும் அம்மாவுடன்
செல்ல அடம்பிடித்த
அந்த நொடிகள்
இன்றும் என்னிதயத்துள்
பசுமரத்தாணியாய்....
அன்று முழுவதும்
வீடு செல்லவே
அழுதிட
ஆறுதல் சொல்லி
எண்சட்டத்தை
கையில் தந்து நல்ல
பிள்ளை நீ அழாமல்
விளையாடம்மா என
சமாதானப்படுத்திய
அன்பு ஆசிரியை.. ம்ஹ்ம் ...
மறக்குமோ நெஞ்சம்
மழலைப் பருவமதை...
இரண்டொரு தினங்களில்
நல்ல பிள்ளையாய்
பள்ளி சென்றே
நலமாய்க் கற்று
நல்லொழுக்கம் பேணி
உயர்தரமும் முடித்து
வெளியேறி காலங்கள்
கடந்த பின்னும்
மீண்டும் பள்ளி செல்லும்
அவா மட்டும் இன்னும்
மாறாமல்..
கடந்துவிட்ட
காலமெண்ணி இன்றும்
விழியோரம்
கண்ணீர்த் துளிகள் ...
Tuesday, March 27, 2018
என் ஷாம் தேசத்து சொந்தங்களுக்காய்
சில கண்ணீர் துளிகள் கவித் தூறலாய் !
ஏவுகணைகள் சிதைத்துச்
செல்லும் சரீரங்கள்
துப்பாக்கி முனையில்
சின்னாபின்னமாகும்
முத்தான உயிர்கள் ...
பால் மணம் மாறா
பச்சிளம் பாலகர்கள்
கர்ப்பிணிகள் ..தள்ளாத
வயது முதியோர்கள்
பிணியாளர்கள் ..
ஆண்கள் பெண்களென
பேதமின்றியே
காவு கொண்டு
இரத்த வாடையில்
பசி தீர்த்து ஏப்பமிடும்
கொடுங் கோலன்
ஆசாத்தின் கொலை
வெறிக்கு இரையாகும்
கொடுமை கண்டேன் !
கண்கள் குளமாக
இதயம் துடிக்குதே நம்
ரஸூலின் உம்மத்துக்கள்
கொத்துக் கொத்தாய்
சிதையுறக் கண்டேனே !
தாளவில்லை இறைவா
நம் மனங்கள் ...
உன்அடியார்கள்
துயர் தீர்த்தே உயிர்
உன்அடியார்கள்
துயர் தீர்த்தே உயிர்
காத்தருள் ரஹ்மானே!
கொலை வெறியர்
கொட்டமடக்கி
அடியோடழித்திட
மாட்டாயோ !
சாதி மதமெல்லாம்
உயிருள்ள வரைதானே ..
எச்சாதிக்கும் குருதி
ஓர் நிறம்தானே !
இங்கே பசியாறும்
நாங்கள் ஷாம் தேசத்து
நம் சொந்தங்கள் நீரின்றி ..
ஊணுறக்கமின்றி
பீதியில் துடிக்கும்
அகோரம்
தாங்கவில்லையே..!
என் சொந்தங்களை
காத்தருள் ரஹ்மானே!
சந்தர்ப்பத்தை சாக்காக்கி
பெண் கற்பை
சூறையாடும் காமுகர்க்கும்
பாடம் கற்பித்துவிடு
இறையோனே !
அடங்காக் கொலை
வெறியன் ஆசாத்தை
அடக்கமாக்கிவிடு
பூமா தேவிக்குள் ...
அப்போதேனும் அமைதி
அடையலாம்
அப்பாவி மக்கள் !
சமாதியானோரை
ஷஹீதுடைய
அந்தஸ்த்துடனே மேலான
ஜன்னத்தை நசீபாக்கிடு
தூயோனே !!!
http://safnapoems.blogspot.com
http://safnapoems.blogspot.com

யாரைச் சொல்ல
நல்லவன்போல்
பாசாங்கும்
நா நிறைய பொய்யும்
நரித் தந்திரத்துடன்
நல்லவன் போல் நடித்து
நாம் எதிர்பாரா நேரமதில்
நன்றி மறந்து
நயவஞ்சகனாய் மாறி தன்
நன்மைக்காகத் தன்
தவறு மறைத்து
நண்பனைக் குற்றம் சுமத்தி
நடக்கவில்லை எதுவும்
என்பது போல
நகர்ந்து செல்பவனா
நல்ல நண்பன் ...அவன்
நண்பனல்ல நிச்சயமாக
நய வஞ்சகன் .....
Subscribe to:
Posts (Atom)