Sunday, May 6, 2018

என்னை நேசிக்கும்
என்னிடம்
அன்பு வைக்கும்
யாவரிடமும்
சண்டையிட்டே
பிரிந்துவிடுகிறேன் ...
மனதில்
அன்பில்லாமலல்ல ...
என்னை
நேசிப்பவர் யாரும்
நிலையாய்
நிரந்தரமாய்
இருந்ததில்லை
இதுவரை
பழகிப் பிரியும் முன்னே
விலகிக் கொள்கிறேன்
பழகிய பின் விலகலை
தாங்கிடும்
சக்தியற்றவளாய்

No comments:

Post a Comment