Thursday, April 26, 2018

கொடிய வெயிலில் 
கடும் மழையிலே 
காடு மலைகளிலே 
கொழுந்து பறித்தே 
கைகள் காய்ச்சிப்போக 
கால்(அரை) வயிறுமாய் 
பட்டிணி கிடந்தே 
கஷ்ட்டங்கள் தாங்கி 
வளர்த்தாயம்மா..
கல்வியிலே நீ 
கொடிகட்டிப் பறந்திடு 
கடவுளென்றும் 
கண்மணியுனக்கு 
கருணை காட்டுவார் 
கல்வியை நன்றாய் 
கற்றிடு என 
கனிவாயுரைத்தெனை 
கன்னியமாய் வளர்த்திட 
என் அன்னையவள்க்கு 
ஈடாகுமா அவனியின் 
எந்த உறவும்.. உன்னாசை 
காப்பேனம்மா 
கவலை வேண்டாம் 
கலங்காதே ....

No comments:

Post a Comment