என் ஷாம் தேசத்து சொந்தங்களுக்காய்
சில கண்ணீர் துளிகள் கவித் தூறலாய் !
ஏவுகணைகள் சிதைத்துச்
செல்லும் சரீரங்கள்
துப்பாக்கி முனையில்
சின்னாபின்னமாகும்
முத்தான உயிர்கள் ...
பால் மணம் மாறா
பச்சிளம் பாலகர்கள்
கர்ப்பிணிகள் ..தள்ளாத
வயது முதியோர்கள்
பிணியாளர்கள் ..
ஆண்கள் பெண்களென
பேதமின்றியே
காவு கொண்டு
இரத்த வாடையில்
பசி தீர்த்து ஏப்பமிடும்
கொடுங் கோலன்
ஆசாத்தின் கொலை
வெறிக்கு இரையாகும்
கொடுமை கண்டேன் !
கண்கள் குளமாக
இதயம் துடிக்குதே நம்
ரஸூலின் உம்மத்துக்கள்
கொத்துக் கொத்தாய்
சிதையுறக் கண்டேனே !
தாளவில்லை இறைவா
நம் மனங்கள் ...
உன்அடியார்கள்
துயர் தீர்த்தே உயிர்
உன்அடியார்கள்
துயர் தீர்த்தே உயிர்
காத்தருள் ரஹ்மானே!
கொலை வெறியர்
கொட்டமடக்கி
அடியோடழித்திட
மாட்டாயோ !
சாதி மதமெல்லாம்
உயிருள்ள வரைதானே ..
எச்சாதிக்கும் குருதி
ஓர் நிறம்தானே !
இங்கே பசியாறும்
நாங்கள் ஷாம் தேசத்து
நம் சொந்தங்கள் நீரின்றி ..
ஊணுறக்கமின்றி
பீதியில் துடிக்கும்
அகோரம்
தாங்கவில்லையே..!
என் சொந்தங்களை
காத்தருள் ரஹ்மானே!
சந்தர்ப்பத்தை சாக்காக்கி
பெண் கற்பை
சூறையாடும் காமுகர்க்கும்
பாடம் கற்பித்துவிடு
இறையோனே !
அடங்காக் கொலை
வெறியன் ஆசாத்தை
அடக்கமாக்கிவிடு
பூமா தேவிக்குள் ...
அப்போதேனும் அமைதி
அடையலாம்
அப்பாவி மக்கள் !
சமாதியானோரை
ஷஹீதுடைய
அந்தஸ்த்துடனே மேலான
ஜன்னத்தை நசீபாக்கிடு
தூயோனே !!!
http://safnapoems.blogspot.com
http://safnapoems.blogspot.com
No comments:
Post a Comment