Sunday, April 22, 2018


உண்ண முடியாமல்
உறங்க முடியாமல்
அவதியுற்றே
தொண்டைக்குள்
சென்றதெல்லாம்
வாந்தியாக்கி
என் உதைகளைக் கூட
வரமெனத் தாங்கி.. ஐயிரு
மாதங்கள் சுமையென்று
க்ஷணமும் எண்ணாது
துடியென துடித்து
உயிர் பணயம் வைத்து
ஈன்றாயம்மா...
உதிரத்தைப் பாலாய்
அன்பினைத் தேனாய்
அறிவை உணவாய்
ஊட்டி உன்
கண்ணுக்குள் வைத்தே
காத்தாயம்மா... கண்கள்
குளமாக இன்றும்
எண்ணி வியக்கிறேனம்மா
உன் அர்ப்பணிப்புக்களை...
ஈடேதுமில்லா உனக்கு
கைமாறென
என் செய்வேனோ ???

No comments:

Post a Comment