உண்ண முடியாமல்
உறங்க முடியாமல்
அவதியுற்றே
தொண்டைக்குள்
சென்றதெல்லாம்
வாந்தியாக்கி
என் உதைகளைக் கூட
வரமெனத் தாங்கி.. ஐயிரு
மாதங்கள் சுமையென்று
க்ஷணமும் எண்ணாது
துடியென துடித்து
உயிர் பணயம் வைத்து
ஈன்றாயம்மா...
உதிரத்தைப் பாலாய்
அன்பினைத் தேனாய்
அறிவை உணவாய்
ஊட்டி உன்
கண்ணுக்குள் வைத்தே
காத்தாயம்மா... கண்கள்
குளமாக இன்றும்
எண்ணி வியக்கிறேனம்மா
உன் அர்ப்பணிப்புக்களை...
ஈடேதுமில்லா உனக்கு
கைமாறென
என் செய்வேனோ ???
உறங்க முடியாமல்
அவதியுற்றே
தொண்டைக்குள்
சென்றதெல்லாம்
வாந்தியாக்கி
என் உதைகளைக் கூட
வரமெனத் தாங்கி.. ஐயிரு
மாதங்கள் சுமையென்று
க்ஷணமும் எண்ணாது
துடியென துடித்து
உயிர் பணயம் வைத்து
ஈன்றாயம்மா...
உதிரத்தைப் பாலாய்
அன்பினைத் தேனாய்
அறிவை உணவாய்
ஊட்டி உன்
கண்ணுக்குள் வைத்தே
காத்தாயம்மா... கண்கள்
குளமாக இன்றும்
எண்ணி வியக்கிறேனம்மா
உன் அர்ப்பணிப்புக்களை...
ஈடேதுமில்லா உனக்கு
கைமாறென
என் செய்வேனோ ???
No comments:
Post a Comment