Wednesday, May 11, 2016

என் நினைவுகளில் நீ
இல்லாத செக்கன்கள் கூட
இல்லையென்று சொல்லி
காலமெலாம் நினைத்தே
கண்ணீர் சிந்த வைத்த
என் அன்பு நாயகனே !
நீ சொன்ன வார்த்தைகள்
என் மனத்தில் இனிய
ராகமாய் ஒலித்த போதும்
கண்கள் மட்டும்
கண்ணீர் சிந்துவதை நீ
உணர மறுத்(றந்)ததென்ன?
காலமெல்லாம்
ஒன்றி வாழ்வோம்
சந்தோசமின்றி வேறேதும்
என்னால் நீ காண மாட்டாய்
என்றெல்லாம் உறுதியாய்
சொன்ன நீ இன்று
வேறொருத்தி கை கோர்த்து
என் முன்னே
வலம் வரும் போது
என்னிதயம் துடிப்பது
புரியலையா?
இதயத்துக்குள் நீ மட்டும்
இருக்கிறாயென
சொல்லிப்போன
உனக்கு நிஜமாகவே
இதயமிருக்கிறதா ...
சொல்லிவிடு
என்னுயிரே....!

No comments:

Post a Comment