Wednesday, May 11, 2016

வாழ்க்கை எனும் 
களத்தின் 
வேள்விக்குள்ளே 
சிக்குண்டு 
சிதறிப்போன 
என் இதயமும் 
இமைக்க மறுக்கும் 
என் விழிகளும் 
இன்றும் 
சரணடையத் 
துடிக்குது உன் 
நிழலில் மட்டும் ....
உதட்டோரம்
மலர்ந்தது சிரிப்பு
என் இதயத்தில்
மலர்ந்தது
உன் நினைப்பு..
கண் விழித்ததும்
களைவது கனவு..
ஆனால் நான்
விழித்துக் கொண்டே
காண்கிறேன் கனவு ...
எப்போதும்
எனக்குள் ஓர்
புத்துணர்வு..
ஏனெனில் என்
மனசு முழுதும்
உன் நினைவு..
வாட்டுகிறது என்னை..
வந்துவிடு என் முன்னே ..
ஏற்றுக்கொள் எனதன்பை..
தந்து விட்டேன்
என் மனதை ..
https://www.facebook.com/fathimasafnapoems
சம நீதி வேண்டும்
என் நினைவுகளில் நீ
இல்லாத செக்கன்கள் கூட
இல்லையென்று சொல்லி
காலமெலாம் நினைத்தே
கண்ணீர் சிந்த வைத்த
என் அன்பு நாயகனே !
நீ சொன்ன வார்த்தைகள்
என் மனத்தில் இனிய
ராகமாய் ஒலித்த போதும்
கண்கள் மட்டும்
கண்ணீர் சிந்துவதை நீ
உணர மறுத்(றந்)ததென்ன?
காலமெல்லாம்
ஒன்றி வாழ்வோம்
சந்தோசமின்றி வேறேதும்
என்னால் நீ காண மாட்டாய்
என்றெல்லாம் உறுதியாய்
சொன்ன நீ இன்று
வேறொருத்தி கை கோர்த்து
என் முன்னே
வலம் வரும் போது
என்னிதயம் துடிப்பது
புரியலையா?
இதயத்துக்குள் நீ மட்டும்
இருக்கிறாயென
சொல்லிப்போன
உனக்கு நிஜமாகவே
இதயமிருக்கிறதா ...
சொல்லிவிடு
என்னுயிரே....!
சந்தித்த நாளிலிருந்து
சண்டை மட்டுமே பிடித்து
சந்தேகமும் கொண்டு
சரமாரியாய் பேசி
சந்தோசங்களை பறித்து
சந்தர்ப்பம் பார்த்து
சமாதானம் பேசினால்
சந்தேகம் தீர்ந்து
சமதானமாகி எனை
சமாளிப்பதை போல
சரியான தருணம்
சாவடித்து விட்டாயே ..என்
சப்த நாடி அடங்கு முன்
சந்தித்தால் நிஜமாகவே
செத்துவிடுவேன்
உன் எதிரே ..
சபிக்கப்பட்டவள் நான்
சிந்தும் கண்ணீர்
நீ எனை
சந்தேகித்ததால் தானடா
செத்து விட்டேன்
மனதளவில்
செத்துவிடுவேன்
நிஜமாக விரைவில்......
சந்தேகிக்காதே
எனை இனியும் .
அழகு
ரதியென்றாய்
வெண்
மதியென்றாய்
வண்ண
மலரென்றாய்
தங்கச்
சிலையென்றாய்
காதலியே நீ
என்னுயிரென்றாய்
தாரமாக்கிக்கொள்
என்றேன் ....
பிரிந்து செல்ல
சதி செய்தாய்
காணாமல்
சென்றாய் ....
கயவனே
எங்கே சென்றாய்?
களைந்திடும்
மேகங்களும்
அசையும்
புற் பூண்டுகளும்
கூட உன்னையன்றி
வேறெதையும்
நினைவூட்டவில்லை..
ஏனெனில்... இதயம்
முழுதும் இடைவெளி
இன்றி நிறைந்திருப்பது
உன் நினைவுகள்
மட்டுமே...
வார்த்தைகள் கொண்டு
அலங்கரிக்க முடியா
அன்பின் உறைவிடமே!
அவள் தந்த அன்பில்
வளர்ந்தது நான் மட்டுமல்ல
சுவர்க்கம் செல்லும்
வழியும் தான்..தாயே
நீ ஜனனத்தை உன்
காலடியில் வைத்திருக்கிறாய்
பேரன்பை இதயத்தில்
வைத்திருக்கிறாய் நீ ...
ஒரு கணமேனும்
என்னால் உன்
மனம் கோணி ட்டால்
உன் புத்திரியை
மன்னித்தருள் ...
இல்லையேல் எனக்கு
ஜன்னத் ஹரமாகிவிடும்..
தாயே மன்னித்திடு !
பௌர்ணமி நிலவின்
ஒளியினிலே ...
கடலோரம் நடந்து
கடல் நீரில்
விளையாட
ஆசை வைத்ததற்காக
கடல் நீரையே
என் கண்களில்
சுமக்க வைத்தாயே...
இது தான் உன்
ஆழமான காதலா?