Friday, December 29, 2017

எறும்பூரக் 
கல்லும் 
கறையுமென்பார் 
பெண்ணென்றால்
 பேயும் 
 இறங்குமென்பார் 
என் 
கண்ணீர் கண்டு 
ஏனோ உன் 
இதயம் மட்டும் 
சற்றும் 
அசையவே 
இல்லையே !

Thursday, December 28, 2017

அடர்ந்த 
தோப்புக்குள்ளே 
தனி 
மரமானேன் 
உறவுகளிருந்தும் 
அனாதையானேன் 
சிறகுகளிருந்தும் 
பறக்க முடியாத 
ஊனமென்றானேன் 
மொழிகள் தெரிந்தும் 
மெளனியானேன் 
இத்தனையும் 
நீ எனை 
புரிந்து கொள்ளும் 
அந்த  
நொடிகளுக்காக

Tuesday, December 26, 2017

பத்தோடு 
மூன்றாண்டுகள்
பவ்வியமாய்க் 

கழிந்தாலும்
பல்லாயிரம் 

உயிர்களை
பாவம் பாராமல்
பறித்துச் 

சென்றிட்ட
பயங்கர 

நிமிடங்கள்
பதித்துப்போன 

தடங்கள் 
பல்லாண்டுகள் 

சென்றாலும்
மாறாதோ இந்த
சுனாமி தந்த
வடுவும் வலியும்...?

Friday, December 15, 2017


என் பிரியமான 
நித்திரையே !
இன்பமோ துன்பமோ 
இன்றுவரை கூடவே 
இருந்த நீயும் 
இப்படி விலகி 
இருந்தே என்னை 
சித்திரவதை செய்து 
சிறுக சிறுக 
வதம் செய்வதேன் ?

Tuesday, December 12, 2017

தன்னை 
புரிந்துகொள்ள 
யாரும் 
இல்லாதவர் 
எல்லாம் 
நிச்சயமாக 
என் போலவே 
அனாதைகள் 
தான்!
சுயநலம் மட்டுமே 
வியாபித்திருக்கும் 
இவ் 
வையகம்தானிலே 
நான் கண்ட 
அத்தனை 
உறவுகளும் 
போலியே...
உண்மை 
அன்பென்று 
இங்கு எதுவுமில்லை...
மெய் உறவென்றும் 
யாருமில்லை .....

Saturday, December 9, 2017

ஏழையாக 
படைத்தது 
இறைவன் தவறா 
ஏழைத்தாய்  தன் 
கருவில் உன்னை 
சுமந்தது  தவறா

ஏழையாய் 
ஜனனித்து 
ஏழ்மை மாறாது 
வாழ்வது தவறா

கூழும் கஞ்சியும் 
உன் உணவா ...
உடையில்லை 
உறையுளுமில்லை 
உருவம் மங்கிய 
உன் சரீரத்தில் 
உயிருள்ளபோதும் 
உன் விழிகளில் 
களையில்லை...

இதுதானோ 
உன் விதி 
அத்தனையும் 
காலத்தின் சதி 
என்று மாறும் 
இக்கதி ..

மாற்றத்திற்கு 
ஒன்றே வழி 
அதுவே உன் மதி !

Tuesday, December 5, 2017


கவிச் செடியிலே 
வார்த்தைகள் 
கொய்து 
உன்னை 
வர்ணிக்க 
சொற்களை 
சேகரித்து 
காகிதமாய் 
இதயம் திறந்து 
குறுதித் துளிகளை 
தூரிகையில் 
தொட்டு 
எழுத எடுத்ததும் 
கற்பனைக்கு 
எட்டவில்லை 
எந்த வரிகளும் ...
ஏனெனில் 
நீயே ஓர் 
கவிதை 
உனக்கெதற்கு 
இன்னுமோர் 
கவிதை?

Friday, December 1, 2017

  அண்ணலுக்காய் சில வரிகள்  

 அகிலத்திற்கோர்  
அருட்கொடையாய் 
அன்பின் திருவுருவாய்
அவதரித்த தூதரே
அண்ணல் நபியே!

உண்மையாளராய்
நம்பிக்கைக்குரியவராய்
பாவங்களே செய்யாது
பாவிகலெமக்கு
பாவத்தினின்றும்
தூரமாக நல்
வழிகள் சொன்னீர்களே..!

அனாதையாய்
வளர்ந்தீர்களே
அனாதைகளை ஆதரிக்க
கற்றுத் தந்தீர்களே
கொலை களவு சூது
பாவமென்றீர்களே
ஹதீஸுகளை
மொழிந்தீர்களே
அதன்படி வாழ்ந்தும்
காட்டினீர்களே !

எழுத்தறிவில்லா
உம்மி நபியே
தாங்கள்
இல்லையேல்
திருக் குரானும்
இல்லையே
ஐங்காலத்
தொழுகையும்
இல்லையே !

ரபிய்யுல் அவ்வல்
பன்னிரெண்டாம்
நாளிலிலே ஜனனித்த
ரபிய்யுல் அவ்வல்
பன்னிரெண்டாம்
நாளிலிலே
இறையடியும்
எய்தினீரே !

உங்கள்
உம்மத்துக்களாம்
எம்மை இம்மையிலே
ஈமானுடன் வாழ
வழி சொன்ன ஏந்தலே
யா ரசூலே ...

மறுமையிலும்
நமக்காய் யா உம்மத்தி
யா உம்மத்தி என்று
பிரார்த்திப்பவர் தாங்களே\
அல்லாஹ்விடம்
எமக்காய் மன்றாடி
நரகத் தீயிலிருந்து மீட்க
மன்றாடுபவரே ..
சுவனத்துள்  முதலில்
நுழைபவரே !

மகிழ்கிறோம்
இந்நாளில் தங்கள்
உம்மத்துக்களாய்
இம்மண்ணில்
அவதரித்தோமென்று..

கண்ணீர் சிந்தி
கவலை கொள்கிறோம்
தங்களை தரிசிக்க
பாக்கியமின்றி
நவீன யுகத்தில்
பிறந்துவிட்டோமென்று ..

யா அல்லாஹ்
மறுமைதனிலே
மா நபியை
தரிசிக்கும் அந்த
திருநாளை எமக்கு
பாக்கியமாக்கித்
தந்துவிடு ரஹ்மானே!
இன்ஷா அல்லாஹ்