Friday, January 1, 2016


இயற்கை
----------------
நீ என்ன பெண்ணா 
இல்லை
முரட்டுச்சிங்கமா?
பார்க்க அழகாய்
இலட்சணமாய்
ஓர் நேரம் உன்
கருங் கூந்தலை
விரித்துவிட்டு
நடமாடுகிறாய்
சில வேளை
சுட்டெரிக்கிறாய் ,,,
சில நேரம்
கண்ணீர் சிந்துகிறாய்
சினத்தில் முழங்குகிறாய்
ஒவ்வோர் வேளையும்
பல வார்ண சேலை
கட்டுகிறாய் ஆனால்
மழை நேரம் மட்டும்
ஏழு வர்ண சேலை
கட்டுகிறாய் ..
வில்லாய் வலைந்து
நளினமாய் புன்னகைக்கிறாய்
சில நொடிகளுக்குள்ளே
அச்சேலைதனை மாற்றி
வேறு உடை பூனுகிறாய்
இரவிலே தங்கப் பொட்டு
வைத்து பட்டாடை
கட்டுகிறாய் ...
அழகே வடிவான
நீ பெண்ணா இல்லை....???

No comments:

Post a Comment