கற்பனைகளையும்
கனவுகளையும்
பிசைந்து நானும்
கட்டி வைத்த
வாழ்க்கை எனும்
நாடக மேடை
காதலெனும்
ஒலி பெருக்கியின்
துணையுடன் முழங்கிட
அன்பு மொழிகள் ரீங்காரமிட
நாயகனாய் நீயும்
நாயகியாய் நானும்
நடிக்க இன்பமயமான
காதல் கதை தொடர
அதன் உச்ச கட்டம் இப்படி
துன்பகரமாய்
அமையப்போவதை
உணராத நாயகி
திறமையாய் நடிக்க
தீப்பிளம்பென
வந்த வார்த்தைகள்
இதயத்தை சிதைத்து
காயப் படுத்த ...நாயகியோ
இடி விழுந்த உணர்வோடு
செய்வதறியாது திகைக்க
பிரிவிலே முடிந்தது நாடகம் ..
பார்வையாளருக்குப்
புரியவில்லை
நாடகத்தின் அர்த்தம் ...
நாயகியின் இதயத்தில்
கசிந்ததோ ரத்தம்
அந்தோ பரிதபம்
நாயகனும் நாயகியும்
மேடையில்
பிரிந்து சென்றதோ
இரு துருவம் ...
கனவுகளையும்
பிசைந்து நானும்
கட்டி வைத்த
வாழ்க்கை எனும்
நாடக மேடை
காதலெனும்
ஒலி பெருக்கியின்
துணையுடன் முழங்கிட
அன்பு மொழிகள் ரீங்காரமிட
நாயகனாய் நீயும்
நாயகியாய் நானும்
நடிக்க இன்பமயமான
காதல் கதை தொடர
அதன் உச்ச கட்டம் இப்படி
துன்பகரமாய்
அமையப்போவதை
உணராத நாயகி
திறமையாய் நடிக்க
தீப்பிளம்பென
வந்த வார்த்தைகள்
இதயத்தை சிதைத்து
காயப் படுத்த ...நாயகியோ
இடி விழுந்த உணர்வோடு
செய்வதறியாது திகைக்க
பிரிவிலே முடிந்தது நாடகம் ..
பார்வையாளருக்குப்
புரியவில்லை
நாடகத்தின் அர்த்தம் ...
நாயகியின் இதயத்தில்
கசிந்ததோ ரத்தம்
அந்தோ பரிதபம்
நாயகனும் நாயகியும்
மேடையில்
பிரிந்து சென்றதோ
இரு துருவம் ...
No comments:
Post a Comment