Friday, January 1, 2016

பொன் அந்தி
மாலை வேளை 
செவ்வானம் 
அலங்காரமாய் 
காட்சியளிக்க  நான் 
இரசித்துக் கொண்டே 
மெய் மறந்து நின்றேன் 
திடீரென இருட்டிய 
வானம் இடி மின்னலுடன் 
பொள பொளவென 
மழையாய்ப் பொழிந்தது 
இயற்கையை இரசிக்கும் ஆர்வத்தில் 
நானும் மின்னலைப் 
பார்த்து அதன் ஒளியை 
ரசித்தேன் விடியல் என எண்ணி .... என் வாழ்வு 
அச்தமிக்கப் போவதை 
உணராமல் ...இது என் 
முட்டாள்த்தனமா இல்லை இயற்கை மேல் நான் கொண்ட 
காதலா ... புரியவில்லை இன்னும்  ஆனாலும் 
நான் தொடர்ந்தும் ரசிக்கிறேன் மின்னலுடன் 
மழையின்  அழகை ...

No comments:

Post a Comment