
வெகு தூரம் நடந்தேன்
உன் கை கோர்த்து ..
எதோ ஓர் எண்ணத்தில்
சற்றே திரும்பிப்
பார்த்தேன் என்னைத்
தொடர்ந்து வந்த உன்னை
காணவில்லை..
சற்றே தேடினேன்.. நீ
தொலை தூரத்தில்
எதிர்த் திசையில்
சென்று புள்ளியாய்
மறைந்து
கொண்டிருந்தாய்..
என்னால்
ஆனமட்டும்
சப்தமிட்டேன்
அன்பே என்னை
அழைத்துச் செல் என்று..
ஆனால் உன்
செவிகளுக்கு ...
என் காட்டுக் கத்தல்
கேட்கவில்லலை ..
கண்களில்
கண்ணீரை ஏந்தி.. இதயம்
முழுதும் வலியில் கனக்க ..
சோகமதை சுமந்து ..
காதலை நினைத்து
வந்த வழியே
தொடர்ந்து நடந்தேன்..
காதலெனும் முடிவிலியின்
முடிவிடம் தேடி ......!
ஆனாலும் இவள் காதல்
நெஞ்சுக்குத் தெரியவில்லை
நீ என் வாழ்வில் என்றுமே
கண் விழித்ததும்
களைந்து போகும்
கனவு மட்டும் தான்
No comments:
Post a Comment