Friday, January 1, 2016


அன்பே ...
உன்னோடு பேச
ஆவலாய் வந்தேன்
ஏனடா எனைக்
கொள்ளாமல் கொன்றாய்?
செத்துவிடு என
நீயுரதிருந்தால்
உடனே மாண்டிருப்பேன்
பேசாதே என என்னிடம்
சத்தியம் வாங்கி
சத்தியமாய் எனை
கொன்றுவிட்டாயே !
சாவார்க்கு வேதனை
ஒரு தடவைதான் ..
உன்னோடு நானும்
பேசாதிருந்தால் ..
ஒவ்வொரு செக்கனும்
மரண வேதனையை
உணர்கிறேனே...நிதமும்
இறக்கிறேனே ...நீ
பேசாதிருந்தால்
நிஜமாகவே நானும்
மாண்டு போவேனே ...
என்னுயிரே எனை
ஏனடா கொள்கிறாய் ?
பேசிவிடு நீயும் நான்
மரணிக்கும் முன் ..
என் ஆத்மாவேனும்
சாந்தி பெரும்!

No comments:

Post a Comment