Thursday, April 26, 2018

கொடிய வெயிலில் 
கடும் மழையிலே 
காடு மலைகளிலே 
கொழுந்து பறித்தே 
கைகள் காய்ச்சிப்போக 
கால்(அரை) வயிறுமாய் 
பட்டிணி கிடந்தே 
கஷ்ட்டங்கள் தாங்கி 
வளர்த்தாயம்மா..
கல்வியிலே நீ 
கொடிகட்டிப் பறந்திடு 
கடவுளென்றும் 
கண்மணியுனக்கு 
கருணை காட்டுவார் 
கல்வியை நன்றாய் 
கற்றிடு என 
கனிவாயுரைத்தெனை 
கன்னியமாய் வளர்த்திட 
என் அன்னையவள்க்கு 
ஈடாகுமா அவனியின் 
எந்த உறவும்.. உன்னாசை 
காப்பேனம்மா 
கவலை வேண்டாம் 
கலங்காதே ....
 ஆரவாரமின்றி 
என் 
விழிகள் சிந்தும் 
கண்ணீர்... அது 
ஆறுதல் சொல்லி 
ஆற்ற முடியா 
ஆத்திரங்கள் ...
அவை 
ஆறவே வேண்டாம் 
ஏனெனில் ...
துன்பத்தில் 
இன்பம் கண்ட 
அனுபவசாலியாய் 
மாறிப்போனது 
என்னிதயம் .....

Sunday, April 22, 2018


உண்ண முடியாமல்
உறங்க முடியாமல்
அவதியுற்றே
தொண்டைக்குள்
சென்றதெல்லாம்
வாந்தியாக்கி
என் உதைகளைக் கூட
வரமெனத் தாங்கி.. ஐயிரு
மாதங்கள் சுமையென்று
க்ஷணமும் எண்ணாது
துடியென துடித்து
உயிர் பணயம் வைத்து
ஈன்றாயம்மா...
உதிரத்தைப் பாலாய்
அன்பினைத் தேனாய்
அறிவை உணவாய்
ஊட்டி உன்
கண்ணுக்குள் வைத்தே
காத்தாயம்மா... கண்கள்
குளமாக இன்றும்
எண்ணி வியக்கிறேனம்மா
உன் அர்ப்பணிப்புக்களை...
ஈடேதுமில்லா உனக்கு
கைமாறென
என் செய்வேனோ ???
கஷ்ட்டங்கள் தாண்டி
வாராப் பாவையல்ல
நானும் கற்றுக்கொண்ட
பாடமெல்லாம்
மனக் கஷ்ட்டமத்தில்...
கண் மணியெனக்
கண்டெடுத்த முத்துக்களை
கண்ணுக்குள் வைத்தே
காத்திட்ட போதும்
அவள் கண்ணீர் துடைக்க
அன்னையின் கரங்கள்
மட்டும் நீள்கின்றன.
விவரிக்க வரிகளில்
விடை தெரியா
வினாவாய்
வாழ்க்கைப் பயணம்;;;;

Tuesday, April 17, 2018

பெற்றெடுத்த அன்னை 
என்னை விட்டும் 
பிரிந்த அந்தநாள் 
இன்றும் மறக்கவில்லை..
கை பிடித்தென்னை 
அழைத்துச் சென்று 
வகுப்பறைக்குள் விட்டு 
கண் கலங்க 
அம்மா திரும்பிட 
நானும் அம்மாவுடன் 
செல்ல அடம்பிடித்த 
அந்த நொடிகள்
இன்றும் என்னிதயத்துள் 
பசுமரத்தாணியாய்....
அன்று முழுவதும் 
வீடு செல்லவே
அழுதிட 
ஆறுதல் சொல்லி 
எண்சட்டத்தை 
கையில் தந்து நல்ல 
பிள்ளை நீ அழாமல் 
விளையாடம்மா என 
சமாதானப்படுத்திய 
அன்பு ஆசிரியை.. ம்ஹ்ம் ...
மறக்குமோ நெஞ்சம் 
மழலைப் பருவமதை...
இரண்டொரு தினங்களில் 
நல்ல பிள்ளையாய் 
பள்ளி சென்றே 
நலமாய்க் கற்று 
நல்லொழுக்கம் பேணி
உயர்தரமும் முடித்து 
வெளியேறி காலங்கள் 
கடந்த பின்னும் 
மீண்டும் பள்ளி செல்லும் 
அவா மட்டும் இன்னும் 
மாறாமல்.. 
கடந்துவிட்ட 
காலமெண்ணி இன்றும் 
விழியோரம் 
கண்ணீர்த் துளிகள் ...