Friday, January 1, 2016


இயற்கை
----------------
நீ என்ன பெண்ணா 
இல்லை
முரட்டுச்சிங்கமா?
பார்க்க அழகாய்
இலட்சணமாய்
ஓர் நேரம் உன்
கருங் கூந்தலை
விரித்துவிட்டு
நடமாடுகிறாய்
சில வேளை
சுட்டெரிக்கிறாய் ,,,
சில நேரம்
கண்ணீர் சிந்துகிறாய்
சினத்தில் முழங்குகிறாய்
ஒவ்வோர் வேளையும்
பல வார்ண சேலை
கட்டுகிறாய் ஆனால்
மழை நேரம் மட்டும்
ஏழு வர்ண சேலை
கட்டுகிறாய் ..
வில்லாய் வலைந்து
நளினமாய் புன்னகைக்கிறாய்
சில நொடிகளுக்குள்ளே
அச்சேலைதனை மாற்றி
வேறு உடை பூனுகிறாய்
இரவிலே தங்கப் பொட்டு
வைத்து பட்டாடை
கட்டுகிறாய் ...
அழகே வடிவான
நீ பெண்ணா இல்லை....???

பொன் அந்தி
மாலை வேளை 
செவ்வானம் 
அலங்காரமாய் 
காட்சியளிக்க  நான் 
இரசித்துக் கொண்டே 
மெய் மறந்து நின்றேன் 
திடீரென இருட்டிய 
வானம் இடி மின்னலுடன் 
பொள பொளவென 
மழையாய்ப் பொழிந்தது 
இயற்கையை இரசிக்கும் ஆர்வத்தில் 
நானும் மின்னலைப் 
பார்த்து அதன் ஒளியை 
ரசித்தேன் விடியல் என எண்ணி .... என் வாழ்வு 
அச்தமிக்கப் போவதை 
உணராமல் ...இது என் 
முட்டாள்த்தனமா இல்லை இயற்கை மேல் நான் கொண்ட 
காதலா ... புரியவில்லை இன்னும்  ஆனாலும் 
நான் தொடர்ந்தும் ரசிக்கிறேன் மின்னலுடன் 
மழையின்  அழகை ...


கற்பனைகளையும்
கனவுகளையும்
பிசைந்து நானும்
கட்டி வைத்த
வாழ்க்கை எனும்
நாடக மேடை
காதலெனும்
ஒலி பெருக்கியின்
துணையுடன் முழங்கிட
அன்பு மொழிகள் ரீங்காரமிட
நாயகனாய் நீயும்
நாயகியாய் நானும்
நடிக்க இன்பமயமான
காதல் கதை தொடர
அதன் உச்ச கட்டம் இப்படி
துன்பகரமாய்
அமையப்போவதை
உணராத நாயகி
திறமையாய் நடிக்க
தீப்பிளம்பென
வந்த வார்த்தைகள்
இதயத்தை சிதைத்து
காயப் படுத்த ...நாயகியோ
இடி விழுந்த உணர்வோடு
செய்வதறியாது திகைக்க
பிரிவிலே முடிந்தது நாடகம் ..
பார்வையாளருக்குப்
புரியவில்லை
நாடகத்தின் அர்த்தம் ...
நாயகியின் இதயத்தில்
கசிந்ததோ ரத்தம்
அந்தோ பரிதபம்
நாயகனும் நாயகியும்
மேடையில்
பிரிந்து சென்றதோ
இரு துருவம் ...

அன்பே ...
உன்னோடு பேச
ஆவலாய் வந்தேன்
ஏனடா எனைக்
கொள்ளாமல் கொன்றாய்?
செத்துவிடு என
நீயுரதிருந்தால்
உடனே மாண்டிருப்பேன்
பேசாதே என என்னிடம்
சத்தியம் வாங்கி
சத்தியமாய் எனை
கொன்றுவிட்டாயே !
சாவார்க்கு வேதனை
ஒரு தடவைதான் ..
உன்னோடு நானும்
பேசாதிருந்தால் ..
ஒவ்வொரு செக்கனும்
மரண வேதனையை
உணர்கிறேனே...நிதமும்
இறக்கிறேனே ...நீ
பேசாதிருந்தால்
நிஜமாகவே நானும்
மாண்டு போவேனே ...
என்னுயிரே எனை
ஏனடா கொள்கிறாய் ?
பேசிவிடு நீயும் நான்
மரணிக்கும் முன் ..
என் ஆத்மாவேனும்
சாந்தி பெரும்!



வெகு தூரம் நடந்தேன்
உன் கை கோர்த்து ..
எதோ ஓர் எண்ணத்தில்
சற்றே திரும்பிப்
பார்த்தேன் என்னைத்
தொடர்ந்து வந்த உன்னை
காணவில்லை..
சற்றே தேடினேன்.. நீ
தொலை தூரத்தில்
எதிர்த் திசையில்
சென்று புள்ளியாய்
மறைந்து 
கொண்டிருந்தாய்..
என்னால்
ஆனமட்டும்
சப்தமிட்டேன்
அன்பே என்னை
அழைத்துச் செல் என்று..
ஆனால் உன் 
செவிகளுக்கு ...
என் காட்டுக் கத்தல்
கேட்கவில்லலை .. 
கண்களில்
கண்ணீரை ஏந்தி.. இதயம்
முழுதும் வலியில் கனக்க ..
சோகமதை சுமந்து ..
காதலை நினைத்து
வந்த வழியே
தொடர்ந்து நடந்தேன்..
காதலெனும் முடிவிலியின்
முடிவிடம் தேடி ......!
ஆனாலும் இவள் காதல்
நெஞ்சுக்குத் தெரியவில்லை
நீ என் வாழ்வில் என்றுமே
கண் விழித்ததும்
களைந்து போகும்
கனவு மட்டும் தான்
சிட்டுக் குருவியென
சுதந்திரமாய் பறந்தேன்
அது ஒரு காலம்
புத்தகப் பை
முதுகில் கணக்க
சுமையுடன் நடந்தேன்
அது ஒரு காலம்
நெஞ்சு நிறைய 
காதலைச் சுமந்து
இன்பம் துன்பம் என
இரண்டையும் மாறி 
மாறி அனுபவித்தேன்
அது சில காலம்...
ஆனால் இவை யாவும்
இறந்த காலம்
ஒளடதச் சாலையும்
ஒளடதப் பொட்டலமுமாய்
நடக்கிறேன்.. இது தான்
என் நிகழ காலம்
காலன் எனை 
அழைக்கிறான் .. 
தினங்களை நான்
கணக்கிடுகிறேன் ..
எண்ணி முடியும்
நாள் வெகு
தொலைவிலில்லை
ஆகவே இதுவே என்
நிகழ்  காலம் ,,,,