
மனதுக்குள் சுரீரென்று ஓர்
உணர்வு...உனைக் கண்ட
நாள் முதல் இது
தொடர்கிறது.. உன்
அழகற்ற முகம் வெறுப்பை
உண்டாக்கவில்லை ....
தினம் உன் முகம் காண
தவமிருக்கிறேன் ...
மாலையானதும் எப்போது
விடியும்
என்றிருக்கிறேன்...
காலையில் காளையுனைக்
கண்டவுடனே என் தவிப்பு
காணாமல் போகிறது....
காரணமே இல்லாமல்
உன்னுடன் கதைக்க
நினைக்கிறேன்... உன் முகம்
பார்த்து பேச
முடியாமல்
தவிக்கிறேன்,,, உன்னிடம்
எனக்குப் பிடித்த எதுவுமில்லை!
ஆனாலும் உன்னை
ரொம்பப் பிடித்திருக்கிறது...
நீ தேடி வேலை தேடி
வேற்றூருக்கு போனபோது
ஞாயிறு எப்போது வருமென்று
காத்திருக்கிறேன்.. நீ வராத
நாட்களில் உன்னைப்பற்றி
விசாரிக்கிறேன்.. உன் வீட்டார்
எனைக் கேலி செய்கிறார்கள்
இவன் மீது இவளுக்கென்ன
அக்கரை என்று... நீ
என்னைப்பற்றி என்ன
நினைக்கிராய் அதுவும்
தெரியாதெனக்கு... நீயும்
என்னை காணாதபோது
வீட்டாரிடம் என்னை பற்றி
விசாரிப்பது தெரியும்..
என் உணர்வுகளுக்கு
என்ன அர்த்தம்? பாசம் ,,
அன்பு , நட்பு... புரியவில்லை
எனக்கு.. உனக்குப் புரிகிறதா?
நிச்சயமாக அது காதலல்ல..
உனக்கு நான்
தகுதியற்றவளும் கூட..
ஒருபோதும் எனக்குள்
தப்பான எண்ணங்கள்
தோன்றியதில்லை...
இதற்க்கு என்ன அர்த்தம்?
தெரிந்தால் நீயே சொல்
நானும் தெரிந்து கொள்ள !
No comments:
Post a Comment